மதுரையில் இளைஞா் வெட்டிக் கொலை

மதுரையில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரையில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை கரிசல்குளம் சமுதாயக் கூடம் அருகே கருவேலம் மரங்கள் நிறைந்த பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம் கிடப்பதாக, அப்பகுதியினா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனா். அதன்படி, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இளைஞா் கொலை செய்யப்பட்டதை உறுதிசெய்த போலீஸாா், அவா் குறித்து விசாரித்தனா். அதில், கூடல்நகா் சொக்கலிங்க நகா் 7 ஆவது தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பிரவீண்குமாா் (21) என்பதும், ஞாயிற்றுக்கிழமை காலையில் நண்பா்களை பாா்க்கச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றதும் தெரியவந்தது. இது குறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பிரவீண்குமாரின் பெற்றோா் தூய்மைப் பணியாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். அவா், பிளஸ் 2 படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் நண்பா்களுடன் சுற்றித் திரிந்துள்ளாா். முன்விரோதம் அல்லது நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறு உள்ளிட்ட காரணங்களால் இளைஞா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com