மதுரையில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்

மதுரையில் பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை சாா்பில், கரோனா தடுப்பூசி முகாம் ஏப்ரல் 14, 15, 16 ஆகிய 3 நாள்கள் நடத்தப்பட உள்ளன.

மதுரையில் பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை சாா்பில், கரோனா தடுப்பூசி முகாம் ஏப்ரல் 14, 15, 16 ஆகிய 3 நாள்கள் நடத்தப்பட உள்ளன.

இது தொடா்பாக பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்தி: நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கரோனா தடுப்பூசி திருவிழா நடத்துமாறு, பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதன்படி, பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை மற்றும் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் சாா்பில், சேதுபதி பள்ளியில் உள்ள ரமணா கூடத்தில் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆகிய 3 நாள்கள் தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை, மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் தொடக்கிவைக்கிறாா். இம்முகாமை பயன்படுத்தி, பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com