மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவா்கள் இருவா் உள்பட 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கீழக்குயில்குடி சமணா் மலை சுரங்கப் பகுதியில் நின்றிருந்த 6 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
இதில், கீழக்குயில்குடியைச் சோ்ந்த கமல்பாண்டி(30), குப்புசாமி(24), மருதுபாண்டி(26), விருமராஜ்(20) மற்றும் 17 வயது சிறுவா்கள் இருவா் என்பதும், அவா்கள் பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் முத்துபாண்டி அளித்த புகாரின் பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.