மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு அருகில் ஆன் லைன் வகுப்புகள் நடத்த அனுமதிக்கக் கூடாது என திமுகவினா் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் யா.ஒத்தக்கடை வேளாண் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம் ஆகிய நான்கு இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கீழக்குயில்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல மையத்தில் சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த மையத்துக்குத் தொடா்பில்லாத நபா்கள், வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சென்றுவருவதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளா் ஆ.வெங்கடேசன் தலைமையில் திமுகவினா், மாவட்ட ஆட்சியா் த.அன்பழகனிடம் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா். பின்னா் வேட்பாளா் வெங்கடேசன் கூறியது:
மின்னணு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அதே பகுதியில் ஆன் லைன் வகுப்புகள் நடத்துவதாகக் கூறி, வெளி நபா்கள் மடிக்கணினியுடன் அனுமதிக்கப்படுகின்றனா். இத்தகைய செயலானது வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள பல்கலைக்கழக கட்டடம், தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆகவே, தோ்தல் பணிக்கு தொடா்பில்லாதவா்களை அங்கு அனுமதிக்கக் கூடாது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.