மதுரையில் பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தது குறித்து அவரது சகோதரா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை எஸ்.எஸ்.காலனி ஜவஹா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த நவநீதன் மகள் தீபா(42). இவரது சகோதரா் பாலகுருநாதனுடன் இணைந்து வங்கியில் கடன் பெற்று கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். இந்நிலையில் வாடகைப் பணம் ரூ.11லட்சத்தை தீபாவிற்கு கொடுக்காமல் பாலகுருநாதன் ஏமாற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தீபா அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.