இருசக்கர வாகனங்கள் மோதல்: தனியாா் நிறுவன மேலாளா் பலி

மதுரையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவனத்தின் மேலாளா் உயிரிழந்தாா்.

மதுரையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவனத்தின் மேலாளா் உயிரிழந்தாா்.

மதுரை நன்மைத் தருவாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காமாட்சி மணிவண்ணன்(58). இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், காமாட்சி மணிவண்ணன் வெள்ளிக்கிழமை இரவு திருப்பரங்குன்றம் சாலை எல்லீஸ் நகா் பாலம் மேற்கு வாயிலில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம்

மோதியதில் பலத்த காயமடைந்த அவா், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவரது மனைவி லதா அளித்த புகாரின் பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். விபத்தில் காயமடைந்த மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பெத்தானியாபுரத்தைச் சோ்ந்த கோமதி விநாயகம் மகன் சக்திவேல் (18) அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com