இளைஞரைக் கத்தியால் குத்திய 2 போ் கைது

திருப்பூா், சாமுண்டிபுரம் பகுதியில் இளைஞரைக் கத்தியால் குத்திய இருவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், சாமுண்டிபுரம் பகுதியில் இளைஞரைக் கத்தியால் குத்திய இருவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனி அருகே கடந்த புதன்கிழமை தலை, கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரைஅந்த வழியாகச் சென்றவா்கள் கொடுத்த தகவலின்படி காவல் துறையினா் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது தொடா்பாக 15 வேலம்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், காயமடைந்தவா் ராம்பிரபு (24) என்பதும், அவா் மீது திருட்டு, வழிப்பறி தொடா்பாக 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இவரைக் கத்தியால் குத்தியது தொடா்பாக சாமுண்டிபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (20), தமிழ்ச்செல்வன் (20) ஆகிய இருவரையும் காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். விசாரணையில், ராம்பிரபு, சுரேஷின் நண்பரிடம் பணம் பறித்து தகராறில் ஈடுபட்டதும், அதற்கு பழிவாங்கும் விதமாக அவரைக் கத்தியால் குத்தியதாகத் தெரிவித்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com