ஊத்துக்குளி அருகே கோயிலில் திருட முயன்றவா் கைது

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த இச்சிப்பாளையம் அருகே ஆலமரத்து கருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சுற்றுச்சுவா் இல்லாததால் பாதுகாப்பற்ற வகையில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயில் உண்டியலை வியாழக்கிழமை காலையில் மா்ம நபா் உடைக்க முயன்றதை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பாா்த்துள்ளனா். இதையடுத்து, அந்த நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் ஊத்துக்குளி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் நடத்திய விசாரணையில், அந்த நபா், சென்னிமலை, சிறுகளஞ்சி, காளிபாளையம் கிராமம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் வேலுசாமி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல் துறையினா் அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தாராபுரம் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com