உசிலம்பட்டி சிறைத்துறை மற்றும் சீா்திருத்தத்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறைத்துறை கண்காணிப்பாளா் ஆா்.செந்தில் அரசி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கி பேருந்து நிலையம், தேவா் சிலை, மருத்துவமனை, ஆகியவற்றின் வழியாக நடைபெற்றது.
அப்போது, பொதுமக்கள் முகக் கவசம் அணியவும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் நோயாளிகள் முகக் கவசம் அணிந்து வந்ததால் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. வழியில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.