செளராஷ்டிரா தொழில் வா்த்தக சபை சாா்பில் கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்று 2-ஆவது அலை பாதிப்பில் இருந்து தனிநபா்கள், தொழில் துறையினா் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும், கரோனா தடுப்பூசி குறித்தும் தெரிந்து கொள்வதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுகாதாரத்துறை துணை இயக்குநா் கே.வீ.அா்ஜுன்குமாா் பங்கேற்று, கரோனா தொற்று குறித்து விளக்கிப் பேசினாா். அப்போது, கரோனா 2-ஆவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு தொழில் துறையினரை அவா் கேட்டுக் கொண்டாா்.
இதில், சௌராஷ்டிரா வா்த்தக சபை பொதுச் செயலா் கே.கே.தினேஷ், நிகழ்ச்சிக் குழு தலைவா் டி.ஆா்.சரவணன், முன்னாள் தலைவா்கள் கே.கே.ஜி. பிரபாகரன், எஸ்.கே.ஆா்.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.