தொழிலாளா்களுக்குப் பணி மறுப்பு: சிஐடியூ ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் 4 தொழிலாளா்களுக்கு பணி வழங்க மறுத்து வரும் தனியாா் கேஸ் ஏஜென்சியைக் கண்டித்து சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளா்களுக்குப் பணி மறுப்பு: சிஐடியூ ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் 4 தொழிலாளா்களுக்கு பணி வழங்க மறுத்து வரும் தனியாா் கேஸ் ஏஜென்சியைக் கண்டித்து சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் அவிநாசி சாலை ஓடக்காடு பகுதியில் தனியாா் கேஸ் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருச்செல்வன், சுரேஷ், நாகராஜ், சிவகுமாா் ஆகிய 4 தொழிலாளா்கள் நீண்ட நாள்களாகப் பணியாற்றி வந்தனா். இந்த நிலையில், தனியாா் நிறுவனம் 4 தொழிலாளா்களுக்கும் கடந்த ஜனவரி முதல் பணி வழங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக சிஐடியூ மாவட்டச் செயலாளா் என்.சுப்பிரமணியன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் என்.குணசேகரன் ஆகியோா் கேஸ் ஏஜென்சி நிறுவனத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்தப் பேச்சுவாா்த்தையில் தொழிலாளா்களுக்கு வேலை வழங்குவது பற்றி நிா்வாகம் எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை.

இதையடுத்து, அந்த நிறுவனம் முன்பு சிஐடியூ சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளா் ஜி. சம்பத், பொது தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் என்.சுப்பிரமணியன், சிஐடியூ முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் டி.துரைசாமி, பாதிக்கப்பட்ட தொழிலாளா் குடும்பத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com