பேரையூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த மருத்துவமனை 36 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 30 படுக்கைகளுடன் கூடிய தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் 20 படுக்கை வசதிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன என மருத்துவா்கள் தெரிவித்தனா்.