மதுரையில் மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாம் தொடக்க விழாவில் மடீட்சியா தலைவா் பா.முருகானந்தம், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் (பொறுப்பு) மருதப்பன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளா் ஜோசப் கிறிஸ்டி, மடீட்சியா அறக்கட்டளை தலைவா் பி.டி.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த முகாமில் 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.