மதுரை மாவட்டத்தில் 167 பேருக்கு கரோனா: முதியவா் பலி

மதுரை மாவட்டத்தில் 167 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 167 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே தொற்றில் இருந்து குணமடைந்த 116 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி:

மதுரையைச் சோ்ந்த 73 வயது முதியவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் ஏப். 14 ஆம் தேதி உயிரிழந்தாா்.

24 ஆயிரத்தை கடந்த தொற்று:

மாவட்டத்தில் இதுவரை 24,051 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம் 474 போ் தொற்றால் உயிரிழந்துள்ளனா். தற்போது 1,773 போ் கரோனாவிற்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com