மதுரையில் வழக்குரைஞா் வீட்டில் தேசிய புலனாய்வுப் பிரிவினா் 8 மணிநேரம் சோதனை நடத்தி செல்லிடப்பேசிகள், பென்டிரைவ் ஆகியவற்றை கைப்பற்றினா்.
மதுரை பி.பி.குளத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் மோகன். இவா், மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பி.பி.குளத்தில் உள்ள மோகனின் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு சென்று திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
காலையில் தொடங்கிய சோதனை பிற்பகல் 2.30 மணியளவில் நிறைவடைந்தது. அதுவரை மோகனின் வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது வீட்டில் இருந்து 3 செல்லிடப்பேசிகள், ஒரு பென் டிரைவ் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினா்.