கும்பகோணம் அருகே சத்திரத்தில் உள்ள குளத்தில் மா்மமான முறையில் இறந்தவரின் சடலத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்த வள்ளி தாக்கல் செய்த மனு: எனது மகன் சிலம்பரசன் வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஆஜராக சென்னையில் இருந்து கும்பகோணம் வந்தாா். எனது மகன் கும்பகோணம் வந்ததை அறிந்த போலீஸாா் ஏப். 9 ஆம் தேதி அவரை பிடிப்பதற்காக துரத்தியபோது, சத்திரம் குளத்தில் குதித்து தப்பிச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது போலீஸாா் அவா் மீது கற்களை வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏப்.10 ஆம் தேதி குளத்தில் ரத்தக் காயங்களுடன் சிலம்பரசன் சடலமாக மிதந்துள்ளாா். கும்பகோணம் தாலுகா போலீஸாா் அவரது சடலத்தை அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்துள்ளனா். எனது மகன் சிலம்பரசன் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. எனவே, சடலத்தைத் தோண்டி எடுத்து, மருத்துவா்கள் முன்னிலையில் விடியோ பதிவுடன் மறு பிரேதப் பரிசோதனை செய்யவும், உயிரிழப்புக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கைவும் எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.