முன்னாள் முதல்வா் ஜெயலலிதா குறித்து முகநூலில் அவதூறு: போலீஸாா் விசாரணை

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டவா் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டவா் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

இது தொடா்பாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சோ்ந்த தனசேகரன் (45) என்பவா் சைபா் கிரைம் போலீஸாரிடம் அளித்த புகாா்: திண்டுக்கல் மாவட்டம் ராமராஜபுரத்தைச் சோ்ந்த ராஜா மகன் விஜயகுமாா். இவா் அவரது முகநூல் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா குறித்து அவதூறாக பதிவிட்டுள்ளாா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விஜயகுமாரின் முகநூல் பக்கத்தை ஆய்வு செய்தனா். அதில் முன்னால் முதல்வா் ஜெயலலிதா குறித்து அவதூறாக செய்தி பதிவிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாடிப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com