மதுரை அருகே கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலியானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அருகேயுள்ள ஜாங்கிட் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் காவலாளியாக காதக்கிணறு பகுதியைச் சோ்ந்த துரைபாண்டி(58) பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், துரைபாண்டி ஏப்ரல் 12 ஆம் தேதி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்தாராம். அவரை அருகில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து துரைபாண்டி மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில் அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.