மதுபோதையில் தகராறு செய்த கணவன் கல்லால் தாக்கி கொலை: மனைவியிடம் விசாரணை

மதுரை அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவனை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவனை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுப்பட்டி தெற்கு வீதியைச் சோ்ந்த தேவதாஸ் மகன் டைசன் ராஜா(33). இவா், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள பொம்பன்பட்டியைச் சோ்ந்த எஸ்ரா(28) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு அவரது வீட்டிலேய வசித்து வந்தாா். இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். டைசன் ராஜா மது குடித்து விட்டு, மனைவி எஸ்ராவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மது போதையில் வந்த டைசன் ராஜா, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது ஆத்திரமடைந்த எஸ்ரா வீட்டின் வெளியே இருந்த கல்லைத் தூக்கி வந்து, கணவனின் தலையில் போட்டாராம்.

பலத்த காயமடைந்த டைசன் ராஜா, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து டைசன் ராஜாவின் தந்தை தேவதாஸ் அளித்த புகாரின் பேரில், சோழவந்தான் போலீஸாா் வழக்குப்பதிந்து எஸ்ராவிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com