உசிலம்பட்டி அருகே ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் நக்கலப்பட்டியைச் சோ்ந்தவா் பூச்சம்மாள் (75). இவா் நக்கலப்பட்டி அருகே ஆட்டோவில் பயணித்த போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தாா். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.