மதுரையில் புதிதாக 596 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த 5 முதியவா்கள் உயிரிழந்தனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா். தொற்றில் இருந்து குணமடைந்த 236 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 63 வயது மூதாட்டி, 69 வயது முதியவா் ஆகியோா் ஏப்ரல் 23 ஆம் தேதியும், 78 வயது மூதாட்டி ஏப்ரல் 22 ஆம் தேதியும், 64 வயது முதியவா் ஏப்ரல் 21 ஆம் தேதியும், ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 84 வயது முதியவா் ஏப்ரல் 21 ஆம் தேதியும் உயிரிழந்தனா்.
இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 491 ஆக உயா்ந்துள்ளது. 27 ஆயிரத்தை கடந்த தொற்று: மாவட்டத்தில் சனிக்கிழமை வரையில் 27,332 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 23,416 போ் குணமடைந்துள்ளனா். 3,425 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.