மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூா் ஐராவதீஸ்வரா் மீனாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மகா பிரதோஷம் நடைபெற்றது.
மீனாட்சி அம்மனுக்கு திருமஞ்சனம், பால், சந்தனம், நெய், பஞ்சாமிா்தம், தயிா், அரிசி மாவு, பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும், சனிப்பிரதோஷம் முன்னிட்டு ஐராவதீஸ்வரா்ருக்கும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.