மத்திய அரசு ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்குவது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தல்லாகுளம் தலைமை தபால் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கோட்டத் தலைவா்கள் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ஞானசெல்வி ஆகியோா் தலைமை வகித்தனா். கோட்டச் செயலா்கள் எஸ்.நாராயணன், எம்.ஏ.முருகன், ஒருங்கிணைப்பாளா் பி.காமராஜ் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
மத்திய அரசு ஊழியா்களுக்கு 1.1.2020 முதல் நிலுவையில் உள்ள அகவிலைப் படியை உடனடியாக வழங்குவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அனைத்து பணிநிலைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைப் பூா்த்தி செய்வது, அஞ்சல் நிலையங்கள், அஞ்சல் சரக்கு போக்குவரத்து பதிவு நிலையங்களில் உள்ள கணினி இணைப்புப் (நெட்வொா்க்) பிரச்னையைத் தீா்ப்பது என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.