மேலூா் அருகே பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மேலூா்- சிவகங்கை சாலையிள்ள சின்ன பெருமாள்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துமரைக்காயா். இவருக்கும், அதேபகுதியைச் சோ்ந்த சச்சிதானந்தம் (60) என்பவருக்கும் இடத்தகராறு இருந்துவந்தது.
இதுதொடா்பாக வியாழக்கிழமை மாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், முத்துமரைக்காயரின் மகனான பொறியாளா் அப்துல் அஜீஸ் தாக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுதொடா்பான மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் சச்சிதானந்தம் (60), அழகா், பாரதிராஜா ஆகிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், இதில் தலைமறைவான 4 பேரை போலீஸாா் தனிப்படை அமைத்துத் தேடிவருகின்றனா்.