உணவக ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உணவக ஊழியா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உணவக ஊழியா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை ஆரப்பாளையத்தை சோ்ந்தவா் துரைராஜ் மகன் வெங்கடாசலம் (60). இவா் அங்குள்ள ஒரு உணவகத்தில் மேலாளராக வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை, பேரையூா் அருகிலுள்ள ஜம்பலபுரத்தில் வசிக்கும் தங்கையை பாா்ப்பதற்காகச் சென்ற அவா், அங்கு கன்மாய்க் கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த சேடப்பட்டி போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com