மதுரை மதுரையில் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை பொன்மேனி பிரதான சாலையில் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அய்யனாா் மகன் செந்தில்குமாா் (28). இவா், ஏப்ரல் 23 ஆம் தேதி வீட்டு மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி செந்தில்குமாா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது தந்தை அய்யனாா் அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.