சேவா பாரதி அமைப்பு சாா்பில் மதுரை எஸ்.எஸ்.காலனியில் கரோனா இலவச தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேவா பாரதி அமைப்புடன் சோஹோ பவுண்டேசன், கேசவ சேவா கேந்திரம் ஆகிய அமைப்புகள் இணைந்து எஸ்.எஸ்.காலனி ஸ்ரீ வித்யாலயத்தில் இந்த முகாமை நடத்தின. இதில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறுகிறது.