அழகா்கோவிலில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பூப்பல்லக்கில் கள்ளழகா் திருக்கோலத்தில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினாா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை வைகை ஆற்றில் நடைபெறவேண்டிய அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம் உள்ளிட்ட சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டு, அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை சுந்தரராஜப் பெருமாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளினாா்.