மதுரையில் கரோனா விதிமீறல்களைக் கண்காணிக்க 20 குழுக்கள் அமைப்பு: ஆட்சியா்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுஇடங்களில் அரசின் வழிகாட்டுதல்களை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க மதுரையில்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுஇடங்களில் அரசின் வழிகாட்டுதல்களை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க மதுரையில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியது:

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று முற்றிலும் ஒழிந்துவிட்டதாக மக்கள் கருதுகின்றனா். தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, முழுமையாக ஒழிந்துவிடவில்லை. ஆகவே, மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமானது.

கரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் தவிா்க்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், கோயில்கள், பெரிய வணிக வளாகங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆகஸ்ட் 1 முதல் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

கரோனா மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதை எதிா்கொள்வதற்கு தயாா் நிலையில் மாவட்ட நிா்வாகம் உள்ளது. ஏற்கெனவே, அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள், தற்காலிக சிகிச்சை மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 6 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் வசதி ஏற்படுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது.

மதுரையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்காணிக்க வருவாய், காவல், மாநகராட்சி அலுவலா்களைக் கொண்ட 20 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இக் குழுவினா் அரசின் நிலையான வழிகாட்டுதல்களை மீறுவோரிடம் அபராதம் வசூலிப்பா். வணிக நிறுவனங்களில் பெரும் விதிமீறல்கள் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com