மதுரை அருகே கோயிலில் நடைபெற்ற விளக்கு பூஜை நிகழ்ச்சியில் தீயில் கருகிய பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை ஆத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த சூா்யமூா்த்தி மனைவி தேன்மொழி(59). இவா் புதுப்பட்டி முனீஸ்வரன் கோயிலில் ஜூலை 23 ஆம் தேதி நடந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்டாா். அப்போது, அவரது சேலையில் தீப் பற்றியது. இதில் பலத்த காயமடைந்த தேன்மொழி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேன்மொழியின் மகன் காா்த்திகேயேன் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.