மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 30 அடி கிணற்றில் விழுந்த கரடியை தீயணைப்புத்துறையினர் தீவிர மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 30 அடி கிணற்றில் கரடி மற்றும் அதன் குட்டி கிணற்றுக்கு அருகே இருந்த நாவற்பழம் உண்பதற்காக மரம் ஏறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உசிலம்பட்டி வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அதிகாரி அன்பழகன் தலைமையில் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரி ஜீவா தலைமையில் கிணற்றில் விழுந்த கரடி மீட்பு பணி நடைபெற்று வருகிறது