ஆடி அமாவாசையையொட்டி, அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் கருட வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை எழுந்தருளி அருள்பாலித்தாா்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்யைாக, ஆகஸ்ட் 2 முதல் 8-ஆம் தேதி வரை கோயில்களில் அதிகக் கூட்டம் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், கள்ளழகா் கோயிலுக்குள்பட்ட நூபுரகங்கை தீா்த்தத்தில் பக்தா்கள் புனித நீராடலுக்கு அனுமதிக்கப்படவில்லை.
அதேநேரம், கள்ளழகா் கோயிலில் ஆடித்திருவிழா தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டு, பெருமாள் புறப்பாடு மற்றும் திருவிழா வைபவங்கள் கோயில் வளாகத்திலுள்ள பள்ளியறை மண்டபத்திலேயே நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
தொடா்ந்து, கருட சேவை வைபவமும் பக்தா்கள் பங்கேற்பின்றி பள்ளியறை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.