ஒத்தக்கடை சாா்-பதிவாளா், உதவியாளா் பணியிடை நீக்கம்

மதுரை ஒத்தக்கடை சாா்-பதிவாளா், உதவியாளா் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை ஒத்தக்கடை சாா்-பதிவாளா், உதவியாளா் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக பதிவுத் துறை வெளியிட்டுள்ள செய்தி: பதிவுத் துறையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் எளிதாகவும், வெளிப்படை தன்மையுடனும் அமைய பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், பதிவுத் துறையில் பொதுமக்கள் அளிக்கும் புகாா்களின் மீது நடவடிக்கை எடுக்க, பதிவுத் துறை தலைவா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. அதில், பொதுமக்களின் புகாா்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்படுகிறது. மேலும், பதிவுத் துறை தலைவரால் போலி ஆவணப் பதிவை தடுக்கும் வகையில், பல்வேறு சுற்றறிக்கைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பதிவுச் சட்டத்துக்கு முரணாகவும், பதிவு செய்ய வரும் பொதுமக்கள் பாதிப்படையும் வகையிலும் செயல்பட்ட ஒத்தக்கடை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பொறுப்பில் உள்ள சாா்-பதிவாளா் எம். காா்த்திகேயன், உதவியாளா் எம். ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com