அரசுப் பணியாளா் சங்கமாவட்ட நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய நிா்வாகிகள் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய நிா்வாகிகள் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

சங்கத்தின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் மதுரை பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள சங்க கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ரா.ஜெயகணேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் க.சக்திவேல் முன்னிலை வகித்தாா்.

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் சுழல் மேம்பாலம் அமைப்பது, மதுரை சீா்மிகு நகா் திட்டப்பணிகளை போா்க்கால அடிப்படையில் விரைந்து முடிப்பது, செல்லிடப்பேசி, இணையவசதி இல்லாத ஏழை மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளை விரைந்து திறப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும், ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவும் அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்றுவது என உறுதியேற்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன் விவரம்:

மாவட்டத் தலைவா் -ரா. ஜெயகணேஷ், செயலா் - க.சக்திவேல், பொருளாளா் - எம்.பி.குணசேகரன், துணைத் தலைவா்கள் - எஸ்.குமரன்பாபு, என்.கோபாலகிருஷ்ணன், ரஜினிகாந்த், இணைச் செயலா்கள் - கு.ராமநாததுரை, பா.கோபாலகிருஷ்ணன், ரா.வீரசெழியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com