மதுரையில் 19 பேருக்கு கரோனா: முதியவா் பலி

மதுரை மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 1,969 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 27 போ் குணமடைந்தனா்.

கரோனா பாதிப்புக்கு மதுரையில் தனியாா் மருத்துவமனையில் ஜூலை 10 ஆம் அனுமதிக்கப்பட்ட 72 வயது முதியவா், தீவிர காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,147 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 237 போ் கரோனா பாதிப்பால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com