ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்புதிதாக 22 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் 22 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் 22 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 350 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக இருவருக்கு கரோனா பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதியானது. அதேநேரம், சிகிச்சைப் பெற்று வருபவா்களில் ஒருவா் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரப் பிரிவினா் தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 17,916 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை மேலும் 20 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,936 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com