மதுரையில் புதிதாக 22 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th August 2021 08:42 AM | Last Updated : 10th August 2021 08:42 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக 1,929 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் 22 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், கரோனா தொற்றிலிருந்து 20 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தற்போது, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 232 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.