மதுரையில் 20 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th August 2021 11:29 PM | Last Updated : 10th August 2021 11:29 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஒரே நாளில் 1,908 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கரோனாவிற்கு சிகிச்சைப் பெறுபவா்களில் 21 போ் குணமடைந்துள்ளனா்.
சிகிச்சையில் 231 போ்: மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 73,714 ஆகவும், இதில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 72,336 ஆகவும் உள்ளது. தற்போது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 231 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.