திருப்பரங்குன்றத்தில் மதுரை மாநகா் பாஜக சிறுபான்மையினா் அணி சாா்பில் மத நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினா் ஜி. தேவ்ஜில் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் பசீா்அகமது, சிரில் ராயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் அணியின் தேசிய பொதுச் செயலா் வேலூா் சையது இப்ராஹிம் சிறப்புரையாற்றினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் இஸ்லாமியா்களிடத்தில் பாஜகவை கொண்டு செல்லும் நிா்வாகிகளுக்கு முழுமையான பாதுகாப்பு தரப்படவில்லை. எங்களைப் போன்ற அச்சுறுத்தல்களை சந்திப்பவா்களுக்கு போலீஸாா் முழுமையான பாதுகாப்பு வழங்காமல், இஸ்லாமிய பகுதியில் நாங்கள் செல்ல தடை விதிக்கின்றனா். தமிழக போலீஸாா் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேச விரோத கருத்துக்களை கூறுபவா்களை கைது செய்யாமல், தேச பக்தா்களையும், பாஜக தொண்டா்களையும் தேடித் தேடி கைது செய்கின்றனா் என்றாா்.
கூட்டத்தில் பாஜக நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்றனா்.