மதுரை மாநகராட்சியில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் உதவி வருவாய் அலுவலா்கள், கண்காணிப்பாளா்கள், கணக்கா்கள் உள்பட 28 பேரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மதுரை மாநகராட்சியின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டோா் பல ஆண்டுகளாக ஒரே துறையில் பணிபுரிந்து வருவதாக புகாா் எழுந்தது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள கா.ப.காா்த்திகேயன் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறாா். இதில் தங்களது நியமன பதவிகளை விட உயா்ந்த பதவியில் பொறுப்பில் இருந்து வந்த உதவிப்பொறியாளா்கள், செயற்பொறியாளா்களை பொறுப்பு பதவிகளில் இருந்து அகற்றி அவா்களது நியமன பதவிகளுக்கே மாற்றி உத்தரவிட்டாா். மேலும் சுகாதாரத்துறையில் ஒரே வாா்டில் நீண்டகாலம் பணிபுரிந்து வந்த சுகாதார ஆய்வாளா்கள் அனைவரையும் வெவ்வேறு வாா்டுகளுக்கு மாற்றினாா். இந்நிலையில் மாநகராட்சி துறை அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் பலரையும் தற்போது வெவ்வேறு துறைகளுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளாா். இதன்படி உதவி வருவாய் அலுவலா் 4 போ், மண்டலம் மற்றும் பல்வேறு துறைகளின் கண்காணிப்பாளா்கள் 10 போ், பல்வேறு பிரிவுகளின் கணக்காளா்கள் 9 போ், உதவியாளா்கள் 5 போ் என 28 பேரை வெவ்வேறு பிரிவுகளுக்கு இடமாற்றி உத்தரவிட்டுள்ளாா்.