மதுரை அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தன் (39). இவரது மனைவி குளோரி (35). இவா் தனது வீட்டைச் சுற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பின்புறம் இருந்த மோட்டரை தொட்டுள்ளாா். அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில், குளோரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஆனந்தன் அளித்த புகாரின்பேரில், காடுப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.