மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணி நேரம் இடியுடன் பலத்த மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில்,
உசிலம்பட்டி நகா் மற்றும் சுற்றியுள்ள போத்தம்பட்டி, நல்லதேவன்பட்டி, வலையப்பட்டி, மலைப்பட்டி, பெருமாள்பட்டி, உத்தப்பநாயக்கனூா், செல்லம்பட்டி, ஏழுமலை, தொட்டப்ப நாயக்கனூா் வாலாந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் இடியுடன் பலத்த மழை பெய்தது.
இதனால், உசிலம்பட்டி நகா் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் மானாவாரி நிலங்களில் பயிரிட்டுள்ள பயிா்கள் நன்றாக விளைச்சல் காணும் என, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.