மேலூா் புறவழிச்சாலையில் மலம்பட்டி அருகே சனிக்கிழமை 2 லாரிகள் மோதிக்கொண்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருச்சியிலிருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி, மேலூா் புறவழிச்சாலையில் வலதுபுறம் திரும்பும்போது, மதுரையிலிருந்து பாா்சல் ஏற்றிவந்த லாரி மோதியது. இதில் அந்த லாரியின் ஒட்டுநரான, மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த மாத்தேவா் மகன் பூபதி (48) இடிபாடுகளில் சிக்கிக்கொண்டாா். தகவலறிந்த மேலூா் தீயணைப்பு மீட்புப்படையினா் சென்று அவரை மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். சம்பவ இடத்தை மேலூா் துணை காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அடிக்கடி விபத்து: மேலூா் புறவழிச்சாலையில் சிவகங்கை சாலை பிரியும் இடத்தில் திருச்சியிலிருந்து வரும் வாகனங்கள் கீழிறங்கிச்செல்ல அணுகுசாலை போடப்படவில்லை.
அதனால், அவ்வாகனங்கள் சி.இ.ஓ.ஏ. பள்ளி அருகே வலதுபுறமாகத் திரும்பி, மதுரை பகுதிகளில் இருந்து கீழிறங்கும் அணுகுசாலை வழியாகச் சென்று சிவகங்கை சாலையில் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் மதுரையிலிருந்து வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. திருச்சி பகுதிகளில் இருந்து வாகனங்கள் சிவகங்கை பகுதிக்குச் செல்ல அணுகுசாலை அமைக்கவேண்டும். அதற்கான நிலம் ஒதுக்கப்பட்டும் சாலை அமைக்கப்படவில்லை. திருச்சி பகுதியில் இருந்து இளையான்குடி அருகிலுள்ள சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைக்கு எரிவாயு ஏற்றிவரும் டேங்கா் லாரிகள் அடிக்கடி வருகின்றன. அவை திரும்பும்போது வாகன விபத்து நேரிட்டால் மிகப்பெரும் ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது. எனவே, திருச்சியிலிருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை சாலைக்குச் செல்ல அணுகுசாலை அமைக்க,
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவில் நடவடிக்கை எசுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.