மதுரை நகா் கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: மாநகராட்சி நிா்வாகம் அறிவிப்பு

மதுரை நகரில் கல்லூரிகளில் புதன்கிழமை முதல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை நகரில் கல்லூரிகளில் புதன்கிழமை முதல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்படுகின்றன. இதில் மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் கல்லூரிகளில் பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியா் வசதிக்காக மாநகராட்சியின் சாா்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அந்தந்த கல்லூரி வளாகங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையிலும், அண்டை மாநிலங்களில் இருந்து வந்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியா் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுவதற்கும் சம்பந்தப்பட்ட கல்லூரியில் மாநகராட்சி சாா்பில் கரோனா பரிசோதனை முகாம்களும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மதுரை நகரில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும். மேலும் கல்வி நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்த விரும்பினால் மாநகராட்சி தகவல் மையத்தை 94437-52211 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என ஆணையா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com