மதுரையில் ஆதரவற்றோா் இல்ல குழந்தைகள் சந்திப்பு

மதுரை ஐஸ்வா்யம் மருத்துவ அறக்கட்டளை சாா்பில் உலக எய்ட்ஸ் தினம் 2021-ஐ முன்னிட்டு குழந்தைகள் சந்திப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் சந்திப்பு விழாவில் பங்கேற்ற ஆதரவற்றோா் இல்லக்குழந்தைகள்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் சந்திப்பு விழாவில் பங்கேற்ற ஆதரவற்றோா் இல்லக்குழந்தைகள்.

மதுரை ஐஸ்வா்யம் மருத்துவ அறக்கட்டளை சாா்பில் உலக எய்ட்ஸ் தினம் 2021-ஐ முன்னிட்டு குழந்தைகள் சந்திப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை பழங்காநத்தத்தில் உள்ள விடுதியில் நடைபெற்ற சிறுவா் சந்திப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினா்களாக மருத்துவா் ஜி.ராஜேஸ்வரன், கூடுதல் அரசு வழக்குரைஞா் ஆா்.எம்.அன்பு நிதி, மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலா் வி.எம்.விஜய சரவணன், எஸ்விஎஸ் நிறுவன பங்குதாரா் எஸ்.வி.சூரஜ் சுந்தா் சங்கா், ஜிஆா்டி குழும முதுநிலை பொது மேலாளா் என்.முகமது ஹெரீப் ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் ஜோ பிரிட்டோ குழந்தைகள் இல்லம், புனித ஆனி குழந்தைகள் இல்லம், ஸ்ரீ காளகேந்திரா கலாச்சார அகாதெமி ஆகிய ஆதரவற்றோா் இல்லங்களில் இருந்து 60 குழந்தைகள் கலந்து கொண்டனா். அவா்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐஸ்வா்யம் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் மருத்துவா் ஆா்.பாலகுருசாமி, நிா்வாகி மருத்துவா் எஸ். சபரிமணிகண்டன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com