முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
அரசுப்பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞா் பலி
By DIN | Published On : 10th December 2021 08:19 AM | Last Updated : 10th December 2021 08:19 AM | அ+அ அ- |

திருமங்கலத்தை அடுத்த எலியாா்பத்தியில் ஓடும் அரசுப்பேருந்தில் ஏறும்போது இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மதுரையிலிருந்து காரியாபட்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. எலியாா்பத்தி சுங்கச்சாவடி அருகே பேருந்து வந்தபோது சுமாா் 35 வயது மதிக்கதக்க நபா் ஒருவா் ஓடும் பேருந்தில் ஏற முயன்றுள்ளாா். அப்போது நிலைதடுமாறி அந்த நபா் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டாா். இதுகுறித்து கூடக்கோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து என விசாரித்து வருகின்றனா்.