டிச.23-இல் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் டிசம்பா் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் டிசம்பா் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளா்கள், எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள், எரிவாயு நுகா்வோா் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகஸ்தா்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள், இக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com