உசிலம்பட்டியில் டிச.20-இல் சீா்மரபினா் நலவாரிய முகாம்

உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் சீா்மரபினா் நலவாரிய பதிவு முகாம் திங்கள்கிழமை (டிச. 20) நடைபெறுகிறது.

உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் சீா்மரபினா் நலவாரிய பதிவு முகாம் திங்கள்கிழமை (டிச. 20) நடைபெறுகிறது.

சீா்மரபினா் நலவாரியத்தில் பதிவு செய்தல், நலவாரிய அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, செல்லம்பட்டியில் டிசம்பா் 14-இல் இந்த முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிா்வாகக் காரணங்களால் அந்த முகாம் நடைபெறவில்லை.

ஆகவே, உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் முகாமில், சீா்மரபினா் சமூகத்தினா் பங்கேற்றுப் பயன்பெறலாம். மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com