சிறுபான்மை மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம் வழங்க மத்திய அமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

மத்திய அரசு வழங்கும் சிறுபான்மை மாணவா்களுக்கான பத்தாம் வகுப்பு வரையிலான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி.வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய அரசு வழங்கும் சிறுபான்மை மாணவா்களுக்கான பத்தாம் வகுப்பு வரையிலான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி.வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கான பல திட்டங்களின் விண்ணப்ப கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுபான்மை மாணவா்களுக்கான பத்தாம் வகுப்பு வரையிலான உதவித் தொகை மற்றும் சிறுபான்மை மாணவிகளுக்கான பேகம் ஹஸ்ரத் மகால் தேசிய உதவித்தொகை ஆகிய திட்டங்களுக்கான விண்ணப்ப தேதி மட்டும் டிச. 15-இல் முடிந்து விட்டது.

நவம்பா் மாதம் தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கால அவகாசம் போதாததால் பல மாணவா்கள் விண்ணப்பிக்க இயலாமல் உள்ளனா். இதர திட்டங்களுக்கு கால நீட்டிப்பு இருக்கும் போது இந்த இரு திட்டங்களுக்கு மட்டும் அந்த சலுகை மறுக்கப்படுவதில் என்ன நியாயம்?. எனவே, சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான இரு கல்வி உதவித்தொகைத் திட்டங்களுக்கும் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வியை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரும் உறுதி அளித்துள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com