முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம்
By DIN | Published On : 19th December 2021 04:41 AM | Last Updated : 19th December 2021 04:41 AM | அ+அ அ- |

மதுரை மாநகா் காங்கிரஸ் கட்சி சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் விலையுா்வை தடுக்காத மத்திய அரசை கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற ஊா்வலம்.
அத்தியாவதியப் பொருள்களின் விலை உயா்வை தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஊா்வலம் சென்றனா்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் அத்தியவாசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. இதைத் தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம் சென்றனா்.
மதுரை மாநகா் கங்கிரஸ் கட்சியின் சாா்பில் பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையில் தொடங்கிய இந்த ஊா்வலம், ஜான்சி ராணி பூங்காவில் அமைந்துள்ள இந்திராகாந்தி சிலை வரை நடைபெற்றது. அப்போது மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநகா் காங்கிரஸ் தலைவா் வீ.காா்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினா் செய்யது பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.